சென்னை, ஏப்.12- கொரோனா தொற்று நோய் குறித்து பொதுமக்க ளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தங்களை தாங்களே பரிசோதித்துக்கொள்ள உதவும் ஆரோக்கிய சேது (ஆரோக்கிய பாலம்) செயலியை பிரபல சமூக வலைதள மான ஷேர் சாட் தனது 6கோடி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசின் இந்த செயலி கொரோனா தொற்று குறித்த தேவையில்லாத அச்சத்தையும் போக்கும் என்றும் சரியான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்றும் நோய் பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் உள்ளதால் 15 இந்திய மொழிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சா ரத்தை தொடங்கப்போவதாக ஷேர் சாட் அறிவித்துள்ளது. நாட்டு மக்களை பெருந் தொற்றில் இருந்து பாதுகாக்க தங்களால் ஆன சிறு முயற்சி இது என்று ஷேர் சாட் இயக்குநர் பெர்ஜெஸ் மல்லு கூறியுள்ளார்.